காதலித்த பெண் பேச மறுத்ததால் நகைபட்டறை தொழிலாளி தற்கொலை
காதலித்த பெண் பேச மறுத்ததால் நகைபட்டறை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
கோவை நாடார் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 49) . இவரது மகன் அருண் (20) . இவர் அந்த பகுதியில் உள்ள தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அருண் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அந்த இளம்பெண் அருணுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதன் காரணமாக மனம் வேதனை அடைந்த அருண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்