தேசிய குடும்பநல கணக்கெடுப்பு பணி: பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

Update: 2021-01-22 15:19 GMT
சிவகங்கை,

மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதலுடன் இந்திய மக்கள் தொகை ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை பொது நலக்கல்வித்துறை இணைந்து நடத்துகின்ற 5-வது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த கணக்கெடுப்பு பணியானது தாய்சேய் நலம், குழந்தை பிறப்பு, இறப்பு, ஊட்டச்சத்து, ரத்தசோகை, கருவுறுதல் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகள், சுகாதாரம் சார்ந்த திட்டங்களின் மதிப்பீடு பற்றிய தகவல்களை சேகரிப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

சிவகங்கை மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வரும் களப்பணியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து தகவல்களை சேகரிப்பார்கள். இக்கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்