மணல் கடத்தியவர் கைது
களக்காடு அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே கீழதேவநல்லூரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 41). லோடு ஆட்டோ உரிமையாளரான இவர் நேற்று முன்தினம் அங்குள்ள பச்சையாற்றில் தனது லோடு ஆட்டோவில் மணல் அள்ளி கடத்தி சென்றார். அப்போது அங்கு ரோந்து சென்ற களக்காடு போலீசார், முருகனை கைது செய்து, லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.