தனியார் பஸ் மோதி வாலிபர் பலி

தனியார் பஸ் மோதி வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2021-02-01 19:09 GMT
வாலிபர் பலி
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா மலைக்குடிபட்டியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் சிவசங்கர் (வயது 25). இவர் விராலிமலையில் அரிசி கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் சொந்த வேலை காரணமாக இலுப்பூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் பகவான்பட்டி அருகே சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சிவசங்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிவசங்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவசங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் தனியார் பஸ் டிரைவரான மணமேல்குடி தாலுகா காரக்கோட்டையை சேர்ந்த செல்வம் (40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்