மதுரை புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதி

மதுரையில் இன்று புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

Update: 2021-02-04 16:28 GMT
மதுரை

மதுரையில் இன்று புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 11 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 46 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் இன்று 8 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

 இதில் 5 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 94 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இந்தநிலையில் மதுரையில் இன்று  ஒரே நாளில் 523 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 928 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்