குளித்தலையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை - முதியவர் கைது
குளித்தலை பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை,
குளித்தலை பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் தனது கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்ற குளித்தலை காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (வயது 60) என்பவரை கைது செய்து, அவர் கடையில் வைத்திருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.