தாரமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

தாரமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு.

Update: 2021-02-07 06:21 GMT
தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி பாக்கியம் (வயது 60). மாணிக்கம் இறந்து விட்டதால் மூதாட்டி பாக்கியம் அங்குள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று பாக்கியம் பெங்களூருவில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் தனது மகனின் வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் பாக்கியத்தின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக அவருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்தனர். அதன்பேரில் பாக்கியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்ற பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த ஒரு தோடு, வளையல், 3 மோதிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்