மளிகை கடைக்காரருக்கு கத்திகுத்து

சங்கராபுரம் அருகே மளிகை கடைக்காரரை கத்தியால்குத்திய அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-02-07 17:34 GMT
சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் மணிமாறன்(வயது 34). இவர் சங்கராபுரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரும், சங்கராபுரம் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் மகன் பிரபு(வயது 37) என்பரும் நண்பர்கள்.  இந்நிலையில் பிரபுவின் மோட்டார் சைக்கிளை முன் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய மணிமாறன் ஆர்.சி.புக் தரும்போது மீதி பணத்தை தருவதாக கூறினார். சம்பவத்தன்று மணிமாறனிடம் பிரபு மீதி பணத்தை கேட்டபோது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு மணிமாறனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவமூர்த்தி வழக்கு பதிவு செய்து பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்