வேலூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்,
வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் தொழிற்சங்க தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, மின்வாரியம் தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மின் வாரிய தலைவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மின் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.