ராமேசுவரம்: விபத்தில் சிக்கிய கார்

விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர்

Update: 2021-02-08 15:22 GMT
ராமேசுவரம்

மதுரையில் இருந்து இன்று ராமேசுவரம் வந்த சுற்றுலா கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. 

பின்னர் அந்த கார், சீதா தீர்த்தம் அருகே சாலையோரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதி கட்டிட நுழைவுப்பகுதியில் மணல் மீது ஏறி நின்றது. இதில் அங்கு அமர்ந்திருந்த தொழிலாளி ஒருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் காரில் இருந்து 4 பேரும் லேசான காயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்