முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்

Update: 2021-02-11 19:47 GMT
மதுரை
தை அமாவாசையையொட்டி நேற்று பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவில், வைகை ஆற்றில் பேச்சியம்மன் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்ய குவிந்தனர். இதேபோன்று ஒத்தக்கடை விநாயகர் கோவில், சவுராஷ்டிரா பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல அமைப்புகள் சார்பில் தர்ப்பணம் செய்ய ஏற்பாடு  செய்யப்பட்டது. இதேபோன்று மாலையில் சிவன் கோவில்களில் தங்கள் முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.

மேலும் செய்திகள்