45 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பூவந்தியில் 45 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
திருப்புவனம்,
திருப்புவனத்தில் உள்ள தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களாக 21 பேரும்,, மகளிர் குழு சுகாதார பணியாளர்களாக 24 பேரும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு பூவந்தியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு தலைமையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம் 45 பேருக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டது.