தொழிலாளி தற்கொலை

சங்கரன்கோவிலில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-13 20:22 GMT
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் காசிமணி மகன் மணிக்கிரிவன் (34). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பெயர் ரேவதி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தற்போது சங்கரன்கோவில் ெரயில் நிலையம் எதிரே உள்ள பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிக்கிரிவன் வருமானம் போதாததால் அவருடைய மனைவி சங்கரன்கோவிலில் உள்ள ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது மணிக்கிரீவனுக்கு பிடிக்காததால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த மணிக்கிரீவன் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்தபோது மணிக்கிரீவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்