திருச்செங்கோடு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செங்கோடு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-14 16:35 GMT
எலச்சிபாளையம்:
 திருச்செங்கோடு அருகே தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 32). தையல் தொழிலாளி. இவர் கணவரை பிரிந்து 5 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். 
இந்தநிலையில் மன உளைச்சலில் இருந்த சாந்தி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட சாந்திக்கு 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்