மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததில் படுகாயமடைந்த வாலிபர் சாவு

லாரி மீது மோதி மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததில் படுகாயமடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-02-14 17:43 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா சீராநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 31). இவர் நேற்று முன்தினம் மாலை பெரம்பலூரில் இருந்து மோட்டார் சைக்களில் அரியலூர் சாலையில் கவுள்பாளையம் அருகே சென்றார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ராஜ்குமார் படுகாயமடைந்தார். மேலும் மோட்டார் சைக்கிள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. மேலும் ராஜ்குமார் மீதும், லாரியின் முன்பக்கமும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கண்ட லாரியின் டிரைவர், ராஜ்குமாரை மீட்டு தீயை அணைக்க முயன்றார். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். இதையடுத்து ராஜ்குமார் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்குமார் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்