மணல் அள்ளிய மினிவேன் பறிமுதல்

திருப்புவனம் வைகை ஆற்றில் மணல் அள்ளிய மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-02-14 20:13 GMT
திருப்புவனம்,

திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது வைகை வடகரை பகுதி.இந்தப் பகுதி வழியாக திருப்புவனம் வைகை ஆற்றில் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் அடிக்கடி மணல் திருட்டு நடைபெற்று வந்துள்ளது. மணல் திருட்டு சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்துவிட்டு மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மினி வேனை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.மணலுடன் மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்