திருச்சி என்.ஐ.டி.யில் நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு

திருச்சி என்.ஐ.டி.யில் நவீன உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2021-02-15 21:15 GMT
திருச்சி,
திருச்சி என்.ஐ.டி.யில் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் என்.ஐ.டி.வளாகத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உடற்பயிற்சி கூடத்தை இயக்குனர் மினிஷாஜி தாமஸ் நேற்று திறந்துவைத்து உடற்பயிற்சி செய்தார். நிகழ்ச்சியில் பதிவாளர் (பொறுப்பு) உமாபதி, டீன் (மாணவர் நலம்) குமரேசன், டீன் (திட்டம் மற்றும் மேம்பாடு) துரை செல்வம் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். ரூ.35 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தில் தொழில் நுட்பத்துடன் கூடிய உபகரணங்கள் இடம் பெற்றுள்ளன. இது மாணவர்கள் விளையாட்டுத்துறையில் சாதிக்க உதவியாக இருக்கும் என இயக்குனர் மினிஷாஜி தாமஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்