கிருஷ்ணகிரியில், கொரோனாவுக்கு முதியவர் பலி - இறந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்வு

கிருஷ்ணகிரியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2021-02-16 19:34 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியை சேர்ந்த 85 வயது முதியவருக்கு மூச்சு திணறல் இருந்தது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 8-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இதனிடையே சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த முதியவர் நேற்று முன்தினம் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. 

நேற்று வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 8 ஆயிரத்து 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 979 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 25 பேர் தற்போது  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்