தளவாய்புரம்,
தளவாய்புரம், சேத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு 10 மணிக்கு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் லேசாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் அரைமணிநேரம் பலத்த மழையாக பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. ஆதலால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.