காரியாபட்டி,
காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் சிறுகுளத்தை சேர்ந்தவர் சங்கையா (வயது 52). விவசாயி. நேற்று தனது மோட்டார் சைக்கிளில் காரியாபட்டிக்கு ஆண்மை பெருக்கி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி கம்பரசன்கோட்டையை சேர்ந்த பீர் மைதீன் ஓட்டி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சங்கையா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து காரியாபட்டி போலீசார் சங்கையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.