தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-18 20:16 GMT
web photo
கீரனூர்
கீரனூரை அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 36). விவசாய கூலித் தொழிலாளி. திருமணமான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரஷே், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் கருத்தபாண்டியன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்