புதிதாக 6 பேருக்கு கொரோனா

புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-02-19 16:52 GMT
மதுரை,

மதுரையில் நேற்று புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 4 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 181 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில் மதுரையில் நேற்று 7 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 6 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 72 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்