புதிதாக 2 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-02-21 18:50 GMT
புதுக்கோட்டை, பிப்.22-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 632 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து  452 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்