ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் கார் மோதி பலி

ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் கார் மோதி பலி

Update: 2021-02-21 20:32 GMT
திருச்சி,
திருச்சி கே.கே.நகர் ரங்கா நகரை சேர்ந்தவர் ஜமால் மொஹிதீன் (வயது 67). ஓய்வு பெற்ற ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வரான இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக வாழவந்தான் கோட்டைக்கு ஸ்கூட்டரில் சென்றார். அப்போது மன்னார்புரம் பாலத்தில் வந்த போது பின்னால் வந்த கார் ஜமால் மொஹிதீன் மீது மோதியது, இதில் படுகாயம் அடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்