நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 24 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8½ லட்சத்துக்கு விற்பனையானது.

Update: 2021-02-21 22:11 GMT
உழவர் சந்தை
நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தையில் நேற்று 20½ டன் காய்கறிகள் மற்றும் 3½ டன் பழங்கள் விற்பனைக்கு வந்து இருந்தன. இவை ரூ.8 லட்சத்து 67 ஆயிரத்து 750-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 2,600 பேர் வாங்கி சென்றனர்.

விலை விவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.27-க்கும், கத்தரி கிலோ ரூ.40-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.40-க்கும், புடலங்காய் கிலோ ரூ.20-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.40-க்கும், கேரட் கிலோ ரூ.36-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.36-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.36-க்கும், உருளை கிழங்கு கிலோ ரூ.32-க்கும், இஞ்சி கிலோ ரூ.36-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.55-க்கும் விற்பனை செய்யப்பட்டன. கடந்த வாரம் கத்தரி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோவுக்கு ரூ.40 குறைந்து கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் வரத்து அதிகரித்து இருந்ததால், அவற்றின் விலை குறைந்து காணப்பட்டதாகவும் உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்