சேலத்தில் மளிகை கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் கடைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.