சிந்தகம்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா

எருது விடும் விழா

Update: 2021-02-22 17:24 GMT
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிந்தகம்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. விழாவில் ஒவ்ெவாரு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. துள்ளிக்குதித்து ஓடிய காளைகளை இளைஞர்கள் விரட்டி சென்றனர். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை காண சிந்தகம்பள்ளி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்