முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2021-02-22 19:04 GMT
தோகைமலை
தோகைமலை அருகே கண்ணுத்துப்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜைகள் நடந்தது. இதையடுத்து நேற்று காலை யாகசாலையில் வைக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக தோகைமலை தமிழ் சங்க நிறுவன தலைவர் காந்திராஜன், இயக்குனர் சாந்தீப்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

மேலும் செய்திகள்