தேசிய காசநோய் வாரவிழா

தேசிய காசநோய் வாரவிழா அனுசரிக்கப்படுகிறது.

Update: 2021-02-22 19:20 GMT
கரூர்
தேசிய காசநோய் வாரவிழா கடந்த 17-ந்தேதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் துணை இயக்குனர் (காசநோய்) மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்