அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Update: 2021-02-22 19:29 GMT
விருதுநகர்,பிப்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வுடனான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், பணி ஓய்வின் போது ரூ.10 லட்சம் பணிக்கொடை தொகை வழங்க வேண்டும் என்றும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்தபடி தங்களை அரசு ஊழியராக்க நடவடிக்கை வேண்டும் என்றும் கோரி சங்க மாவட்ட தலைவர் சாரதாபாய் தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்