மாணவியிடம் சில்மிஷம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-02-22 21:54 GMT
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் புதுமனை தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்பவருடைய மகன் முத்துமாரி (வயது 19). சம்பவத்தன்று  பள்ளி மாணவி ஒருவர் பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்துமாரி, அந்த மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முத்துமாரியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்