முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-02-23 19:23 GMT
நொய்யல்
தவுட்டுப்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் கார்த்தி, மயில்வாகனன், வில்லாளி, அருள்முருகன் பிரசாந்த் சிவக்குமார் மற்றும் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூல் செய்தனர். தொடர்ந்து முககவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டி வந்தாலும், வாகனத்தில் அமர்ந்து இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்