கள்ளழகர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

கள்ளழகர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

Update: 2021-02-23 21:08 GMT
அழகர்கோவில்
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் உண்டியல்கள் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.40 லட்சத்து 43 ஆயிரத்து 626-ம், தங்கம் 44 கிராமும், வெள்ளி 320 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தது. உண்டியல் திறப்பின் போது கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி விஜயன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில், சாய்ராம் பக்தர்களும், கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்