மதுரையில் நேற்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரையில் நேற்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

Update: 2021-02-23 21:08 GMT
மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 6 பேர் நகர் பகுதியையும், 2 பேர் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 210 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் சிகிச்சையில் இருந்து நேற்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதில் 7 பேர் நகர் பகுதியையும், 2 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களுடன் சேர்ந்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 689 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களை தவிர அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் 57 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்