விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வுடனான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வின் போது ரூ. 10 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்பட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 2-வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தினை தொடர்ந்தனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 805 பேர் கலந்து கொண்டனர்.