மேலூர்
மேலூர் அருகே உள்ள திருவாதவூரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(வயது 32). இவரது 2 ஆடுகள் திருட்டு போனது. இதுதொடர்பான புகாரின்பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யா.புதுப்பட்டியை சேர்ந்த அருண்குமார்(21), திருவாதவூரை சேர்ந்த அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் ஆடுகளை மீட்டு திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.