மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
விருதுநகர்,
தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் மற்றும் ராஜபாளையம் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
மாதாந்திர உதவித்தொகையினை ரூ.3ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்த வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் 105 பெண்கள் உள்பட 250 பேர் கலந்து கொண்டனர்.