மின்சார ரெயில் மோதி பெண் பலி

தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் அல்லிராணி மீது மோதியது. இதில் அல்லிராணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

Update: 2021-02-24 12:51 GMT
சென்னை, 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அல்லிராணி (வயது 50). இவரது மகள் சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அல்லிராணி தனது மகளை பார்பதற்காக சென்னை வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை கிண்டி ரெயில் நிலையத்துக்கு அவர் வந்துள்ளார். அப்போது தண்டவாளத்தை கடக்கும் போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் அல்லிராணி மீது மோதியது. இதில் அல்லிராணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மாம்பலம் ரெயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்