அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே சிலட்டூர் கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வடமாடு ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 13 காளைகள் கலந்து கொண்டன. ஒரு காளையை அடக்குவதற்கு 9 வீரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மைதானத்தில் காளை விளையாடுவதற்கு 20 நிமிடம் வழங்கப்பட்டது. காளைகளை அடக்கியவர்களுக்கு ரூ.7 ஆயிரமும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் அறந்தாங்கி போலீசார் ஈடுபட்டு இருந்தனர். வடமாடு ஜல்லிக்கட்டை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.