தற்கொலை மிரட்டல் விடுத்த மக்கள் நலப்பணியாளர்
தற்கொலை மிரட்டல் விடுத்த மக்கள் நலப்பணியாளர்
மதுரை
மக்கள் நலப் பணியாளர்கள் தங்களை மீண்டும் பணியில் அமர்த்த கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்குள் உள்ள மரத்தில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக கயிறு கட்டி கீழே இறக்கி மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.