கார் மோதி முதியவர் சாவு

மானூர் அருகே கார் மோதி முதியவர் இறந்தார்.

Update: 2021-02-28 19:46 GMT
மானூர், மார்ச்:
மானூர் அருகே உள்ள கானார்பட்டியை சேர்ந்தவர் கோயில் பிள்ளை (வயது 75). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் சங்கரன்கோவில்- நெல்லை மெயின் ரோட்டில் ஓரமாக நடந்து வந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், எதிர்பாராதவிதமாக கோயில் பிள்ளை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோயில் பிள்ளை இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்