தலைவர்களின் சிலைகள் துணியால் மூடி மறைப்பு
தலைவர்களின் சிலைகள் துணியால் மூடி மறைப்பு
மதுரை
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையொட்டி மதுரையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மூடி மறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதன்படி மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரது உருவச்சிலைகள் துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
மேலும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டுள்ளன.