ரூ.2 லட்சம் மோசடி

ரூ.2 லட்சம் மோசடி

Update: 2021-02-28 20:43 GMT
மதுரை
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்பாண்டி(வயது 43). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஷீலாதேவி மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் கடன் கேட்டுள்ளனர். இதனையடுத்து ரமேஷ்பாண்டி அவர்களுக்கு ரூ.2 லட்சத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி கடனைத் தொகையை திருப்பி கொடுக்கவில்லை. மேலும் ரமேஷ்பாண்டியை தகாத வார்த்தையில் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்