வீட்டின் கதவை உடைத்து 7½ பவுன் நகை-பணம் திருட்டு

அதிராம்பட்டினத்தில் வீட்டின் கதவை உடைத்து 7½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.

Update: 2021-02-28 20:43 GMT
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் வீட்டின் கதவை உடைத்து 7½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.
7½ பவுன் நகை திருட்டு 
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுத்தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவரது மகன் நவாஸ். நேற்றுமுன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். 
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் வழியாக ஏறி குதித்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கு இருந்த பீரோைவ உடைத்து அதில் இருந்த 7½ பவுன் நகை மற்றும் ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 
மர்மநபர்களுக்கு வலைவீச்சு 
இந்தநிலையில் இரவில் வீட்டிற்கு வந்த நவாஸ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது  நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நவாஸ்  அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில்  அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகி்ன்றனர்.

மேலும் செய்திகள்