மாநகர எல்லைகளில் போலீசார் தீவிர சோதனை
மாநகர எல்லைகளில் போலீசார் தீவிர சோதனை
திருச்சி,
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சியினர் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சி மாநகர பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் நேற்று போலீசாரும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கார் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பின்னரே நகருக்குள் செல்ல அனுமதித்தனர்.