செங்கத்தில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
செங்கத்தில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு.
செங்கம்,
செங்கம் டவுன் பழைய போலீஸ் லைன் தெருவில் வசித்து வருபவர் பூங்கோதை (வயது 66). இவர் நேற்று அதே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ெஹல்ெமட் அணிந்தபடி வேகமாக வந்த மர்ம நபர்கள் பூங்கோதை கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பூங்கோதை ெசங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.