பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சி அதிகாரி பணியிடமாற்றம்

பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சி அதிகாரி பணியிடமாற்றம் திருவள்ளூர் கலெக்டர் அதிரடி நடவடிக்கை.

Update: 2021-03-01 06:24 GMT
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வரித்தண்டலராக பணியாற்றி வருபவர் ஜெய்சங்கர் (வயது 45). இவர் வரி வசூல் செய்வதில் மக்களுடன் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிகாரி ஜெய்சங்கர் மீது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தியதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனரின் பரிந்துரை பேரில், பொதுமக்களுடன் ஒத்துழைக்காத வரித்தண்டலர் ஜெய்சங்கரை திருநின்றவூர் பேரூராட்சிக்கு பணியிடமாற்றம் செய்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா அதிரடி நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்