வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்

Update: 2021-03-01 19:28 GMT
தளவாய்புரம், 
சேத்தூர் பேரூராட்சி பகுதியில் இருந்து தினமும் ஜீவா நகர் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் சென்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் நேற்று பகல் இந்த குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் குடிநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனை சேத்தூர் பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு விரைவில் அதனை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்