61 முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டத்தில் 61 முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-03-01 19:41 GMT
பெரம்பலூர்:
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து, நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் யாரும் நேற்று கொரோனா தடுப்பூசி போடவில்லை. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 61 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்