தூத்துக்குடி அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-02 12:35 GMT
ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேசமணி நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 45). பெயிண்டரான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணேசனுக்கும், அவரது மனைவி அனிதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று கணேசன் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அனிதா கோபித்துக் கொண்டு அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மறுநாள் அனிதா வீட்டிற்கு வந்து பார்த்த போது கணேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்